சொர்க்கமே என்றாலும்...
மக்களே!
இடைவிடாத அயராத பணியாலும், ஊருக்கு விடுமுறையில் செல்லவிருப்பதால் அடுத்தவர் தலையில் என்னுடய பணியை (பதிவுலகப்பணி நீக்கம்) ஏற்றிக்கொண்டிருந்ததாலும் தமிழ்மணம் பக்கம் வந்து ஏழெட்டு நாட்களாகி விட்டது. அதனால் என்ன நடக்கிறது ஏது நடக்கிறது என்று கூட தெரியவில்லை.
சில இன்றியமையா செய்திகள் மட்டும் ப்ராக்ஸியின் மூலம் அறிந்து கொண்டேன். சில அமீரகப் பதிவர்கள் காமெடியில் கலக்கிக்கொண்டிருப்பதாகவும், சில அமீரகப்பதிவர்கள் கவிதை சிறுகதை என தாவு தீர வைத்ததாகவும் செய்திகள் செவிக்கு வந்தன. மற்ற எல்லா பதிவர்களின் இந்த இடைவெளியில் வாசிக்கத்தவறிய பல்தரப்பட்ட பதிவுகளையும் எல்லாவற்றையும் ஊருக்கு சென்றபின் பொறுமையா இருந்து வாசித்துக்கொள்ளலாம் என்றிருக்கிறேன்.
நான் ஊருக்கு செல்வதால் அய்யனார் 'இனி எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் என்னுடைய கலாய்ப்பு குறையும்' என அடர்கானகத்தில் தனிமையில் உரக்க கூவியதாக கேள்விப்பட்டேன். அய்யனாருக்கு ஒரு எச்சரிக்கை! எங்கு செல்லினும் பிரசுரிக்க முடியாத பின்னூட்டங்கள் உங்களை வந்தடைந்தே தீரும் :) 
ஊருக்கு செல்வதென்றாலே இனம்புரியாத மகிழ்ச்சியில் மனம் இருக்கிறது. ஆயிரம்தான் இருந்தாலும் சொந்த ஊருக்கு செல்லும் ஏற்படும் மகிழ்ச்சியே மகிழ்ச்சிதான். இருக்காதா பின்ன? இரண்டு ஆண்டுகளுக்கு பின்பு செல்கிறேன். சிலர் 'நீங்கள் இங்கு குடும்பத்தோடுதானே இருக்கிறீர்கள். நான்காண்டு கழித்து கூட செல்லலாம்' என்கிறார்கள். அவர்களுக்கு அம்மா, அப்பா & உடன்பிறந்தோர் எல்லாம் குடும்பமாக தெரியவில்லை போலும். நாளை (வெள்ளிக்கிழமை) புறப்பட்டு ஊருக்கு செல்கிறேன். மீண்டும் அக்டோபர் முதல்நாள் பணிக்கு திரும்ப வேண்டும். அதற்கிடையில் பொழுது போகாத நேரமெல்லாம் தமிழ்மணம் வரும் எண்ணம் உள்ளது. :) ஊர் சுற்ற வேண்டிய வேலைகளும் உள்ளன.
பாலைவனத்தையே பார்த்து சலித்தவன் அழகான மழைக்காலத்தை எதிர்பார்த்து செல்கிறேன். எனக்காகவாவது வடகிழக்கு பருவமழை பொய்க்காமல் இருக்க வேண்டும். 'நல்லோர் ஒருவர் இருக்கும் பொருட்டு பெய்யும் மழை'ன்னு வேற சொல்லியிருக்காங்க பார்க்கலாம். வானம் பார்க்கும் முகவைச்சீமை என் வருகையாலாவது செழிக்கட்டும் :)).
அமீரகத்தில் தொலைதொடர்பில் சிக்காதவர்கள் இதையே நான் பயணம் சொன்னதாக எடுத்துக்கொள்ளவும்.
அமீரக நண்பர்களுக்கு Bye!
இந்திய நண்பர்களுக்கு Hai!!
