Wednesday, August 30, 2006

அமெரிக்காவுக்கு இரான் சவால்!!

இன்றைய Gulf News நாளேட்டின் முகப்பு செய்தி:





இதில் யார் போக்கை திசை திருப்புகிறார்கள் என்பது எனக்கு குழப்பமாக இருக்கிறது. ஆமா! அதென்ன P5+1 பேக்கேஜ்? அமெரிக்கா பேக்கேஜ் லாபமில்லாமல் இவ்வளவு கூவாது என்று பொருளோ??? என்னமோ போங்க!

இதனை குறித்த விவாதங்கள் வரவேற்கப் படுகின்றன.

Tuesday, August 29, 2006

அனானி வாரம்!!!

ஆம்! நானும் ஒரு அனானிதான் கடந்த சில மாதங்களாக. பதிவுகளை வாசித்து வந்ததோடு சில நேரங்களில் பின்னூட்டங்களும் இட்டுருக்கிறேன். அதற்காக என்னை முகம் வெளிகாட்ட விரும்பாத கோழை என்றழைத்தால் நான் பொருப்பல்ல. எனக்கும் நல்ல ஆக்கமான பதிவுகளை எழுத விருப்பம்தான். வேளைப் பளு மற்றும் சிறிது நாளாகட்டும் என்ற சோம்பேறித்தன்மும் தான் காரணம்.


அனானியாக வந்து மறுமொழி இடுவதை தடுத்து வைக்கும் கொள்கை என்னவென்று எனக்கு இதுவரை விளங்கவில்லை. யாரா இருந்தா என்ன? அவன் என்ன சொல்ல வர்ரான்னு தான் பாக்கணும். அவன் கருத்து பதிவுக்கு சம்மந்தம் இல்லையா, ஒதுக்குவதை உட்டுப் புட்டு சும்மா அது இதுனு...


அன்பு அனானிகளே, நான் உங்களில் ஒருவன். நம்மீது பார்வை பட்டுவிட்டது. பட்டய கெளப்புங்க! ஆனா ஒரு வரம்பு இருக்கட்டுமே!!!

Monday, August 28, 2006

என் இனிய தமிழ்மன(ண)ங்களே!

ஒரு ஆறு மாதத்திற்கு முன் தான் நான் தமிழ்மணத்திற்குள் எட்டி பார்த்தேன். பார்த்தவனுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி. நமக்கு தெரியாம இங்க இப்படி ஒரு கூத்து நடக்குதான்னு. இங்க எப்படி? யார் மூலம்? நான் தலய காட்டுனேன்னு தான் மறந்து போச்சு.


உண்மையைச் சொன்னால் இங்கு தமிழில் எழுதுபவர்களை பார்த்து மகிழ்ச்சியடந்தேன். பலர் பல நிகழ்வுகளை தெரிந்து வைத்திருக்கின்றனர். அதோடில்லாமல் அதை விவாத்திற்குள்ளாக்கவும் தெரிந்து வைத்திருக்கின்றனர். நல்ல செய்திதான், ஆனால் அவர்களையும் அறியாமல் சிலரால் திசை திருப்பப்பட்டு இறுதியில் தனி மனித தாக்குதலோ / இன தாக்குதலோ தான் மிஞ்சுகிறது என்பது வருத்தம் அளிக்கிறது. ஆனால் இங்கு வந்து வாசிக்க தொடங்கியதிலிருந்து இணையத்தில் தவறாது நாள்தோறும் வாசித்து வந்த நாளேடுகள் வாசிப்பை நிறுத்தி விட்டேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில், அந்த அளவிற்கு எனக்கு தமிழ்மணத்தில் செய்திகள் கிடைத்ததும், நாளேடுகள் அனைத்தும் நடுநிலை இழந்து இருப்பதும் தான்.


சரி, எத்தனை நாட்களுக்குத் தான் வாசகராகவே இருப்பது, நாமலும் பட்டய கெளப்பலாம்னு தான் (அதாங்க உளறி கொட்டலாம்னு) இறங்கிட்டேன். இது தான் என் முதல் பதிவு. முதல் பதிவு எதைப் பத்தி எழுதலாம்னு யோசிச்சேன். ஏன் நம்மலோட தமிழ்மண உறவைப்பத்தி எழுதக்கூடாதுன்னு அதையே எழுதிட்டேன். என்ன இந்த தமிழ் தட்டச்சு தான் கொஞ்சம் மண்ட காயுது. போக போக சரியாகிடும். பாக்கலாம்.


ஆனா இங்க தான் இத்தனை குழுக்கள் இருக்கே எப்படி சமாளிக்க போரேன்னு தெரியல. ஆரியர், திராவிடர், ஆத்திகர், நாத்திகர், பார்ப்பனர், இஸ்லாமியர் இன்னும் சில. எப்படியோ குழு சேர்ந்து கும்மி அடிக்காம இருக்கத்தான் கொஞ்சம் மெனக்கெடனும். அப்பப்போ எதையாவது இங்க வந்து உளறலாம்னு இருக்கேன். இந்த வழிப்போக்கன் தமிழ் பதிவுலகத்திலும் கடந்து செல்ல வந்து விட்டான்.


குறிப்பு: இங்கு தமிழ் பிழைகள் காணப்படலாம், பிழை பொறுக்கவும்.