Wednesday, April 18, 2007

துபையில் துணிச்சலான கொள்ளை - வீடியோ

துபையில் உள்ள Wafi City என்ற ஷாப்பிங் சென்டரில் உள்ள நகைக்கடையில் நேற்று முன்தினம் இரவு 9.30 மணி அளவில் ஒரு துணிச்சலான கொள்ளை நடந்துள்ளது. 50 மில்லியன் திர்ஹாம்கள் (1 Dhm = 11 Rs)மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. ஷாப்பிங் சென்டர் திறந்திருந்த நேரத்தில் பொதுமக்கள் முன்னிலையில் இச்சம்பவம் நடந்துள்ளது. இச்சம்பவம் துபையில் பெரும் பரப்பரப்பாக பேசப்பட்டு வருகிறது. இது நன்றாக திட்டமிடப்பட்டு செய்த கொள்ளையாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இரண்டு Audi A8 கார்களுடன் ஷாப்பிங் சென்டரின் கண்ணாடி வாயிலை இடித்து உடைத்தவாரு காரை ஷாப்பிங் சென்டருக்குள் ஓட்டி வந்துள்ளனர். அவர்கள் கொள்ளையடிக்க திட்டமிட்டிருந்த நகைக்கடையின் கண்ணாடியை (இங்கு பெரும்பாலும் நம் நாட்டிலுள்ளதைப் போல் இரும்புக்கதவுகள் இல்லை. கண்ணாடி கதவுகளே) கார் மூலமே உடைத்து மூன்று பேர் மட்டும் இறங்கி கடையில் புகுந்து இரண்டு நிமிடங்களுக்குள் முடிந்தவற்றை அள்ளிக்கொண்டு காரில் பறந்து சென்றுள்ளனர். இவர்கள் கருப்பு உடையணிந்து முகமூடியுடன் காணப்பட்டுள்ளனர். கையில் துப்பாக்கிகளும் வைத்திருந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.



மூன்று நிமிடங்களுக்குள் காவல் துறையினர் விரைந்து வந்தும் அவர்களை பிடிக்க முடியவில்லை. காரை எடுத்துக் கொண்டு கிளம்பிய கொள்ளையர்கள் துபை- அபுதாபி சாலையில் சென்றிருக்கக் கூடும் என்று தெரிகிறது. பின்னர், இரண்டு கார்கள் இந்த சாலையோரத்தில் எரிந்த நிலையில் கிடந்துள்ளன. கொள்ளையர்கள் வெறெங்கேனும் தப்பிச் சென்றிருக்கக் கூடும் என்று காவல் துறை தெரிவிக்கிறது.



அமீரகத்தில் முதன் முறையாக இது போன்ற சம்பவம் நடந்துள்ளது. ஹாலிவுட் சினிமாக்களில் பார்ப்பது போன்ற கொள்ளைச் சம்பவம் இது. நகரங்கள் பெருத்து வருவதற்கு/வளர்வதற்கு கொடுக்கப்பட்ட விலையோ?

இந்த கொள்ளை நடந்த நிகழ்ச்சியை அங்கு நின்றிருந்த ஒருவர் தனது கைத் தொலைபேசியில் வீடியோ எடுத்துள்ளார். மேலும் சிலர் புகைப்படங்களும் எடுத்துள்ளனர்.

8 comments:

said...

அரபு நாடுகளில் இது போன்ற குற்றங்களுக்கு கடுமையான தண்டனை என்று கேள்விப்பட்டிருக்கிறேன்

said...

எனக்கும் அதுக்கும் சம்மந்தம் ஏதும் இல்லப்பா நம்புங்க:-))

said...

//மருதநாயகம் said...
அரபு நாடுகளில் இது போன்ற குற்றங்களுக்கு கடுமையான தண்டனை என்று கேள்விப்பட்டிருக்கிறேன்
//
ஆமாம் மருதநாயகம். அது உண்மைதான். ஆனால், கொள்ளையர்கள் தப்பித்துவிட்டார்கள். பிடிபடுவார்களா என்பது தான் இப்போதைய கேள்வி.

said...

அபிஅப்பா,
கவலைப்படாதீங்க. நான் நம்புறேன். நீங்கதான் Al-Qouz தவிர வேறெங்கும் நகல மாட்டீங்களாமே.

said...

வீடியோவுக்கு நன்றி.
துனிச்சல் - துணிச்சல்

பாக்கலாம் இந்த ஊர் போலிஸ் மகிமைய

Anonymous said...

தேசிபண்டிட்டில் இந்தப் பதிவை இணைத்துள்ளேன். நன்றி

http://www.desipundit.com/2007/04/18/dubai/

said...

தம்பி,
பிழை திருத்தலுக்கு நன்றி.

அப்புறம் கொஞ்ச நாளைக்கு வெளியே தலை காட்டாதீங்க. கொள்ளைக்காரங்க நல்ல 'ஹைட்'டாம்.

said...

//Dubukku said...
தேசிபண்டிட்டில் இந்தப் பதிவை இணைத்துள்ளேன். நன்றி
//
நன்றி டுபுக்கு.