Tuesday, February 20, 2007

பலூன் திருவிழாவும் எனக்கு கிடைத்த ஆப்பும்

சிறிது நாட்களுக்கு முன் முடிவடைந்த 'துபை ஷாப்பிங் திருவிழா'வில் பலூன் திருவிழாவும் (balloon festival) நடைபெற்றது. ஒரு மாத காலம் 'வெப்பக் காற்று' (hot air) பலூன் துபை வானில் பறக்கவிட்டு வேடிக்கை காட்டினார்கள். துபை வரலாற்றில் முதன்முறையாக என்று சன் டிவி ஸ்டைலில் விளம்பரம் வேறு. பெரும்பாலும் துபை புறநகர் பகுதியிலேயே இது நடந்தது.

இம்முறை இதை சோதனை ஓட்டமாகவே நடத்த இருப்பதாகவும், ஸ்பான்ஸர்கள் / வி.ஐ.பி-க்கள் தவிர பொதுமக்கள் (காசு கொடுத்தாலும் கூட) பறக்க முடியாது எனவும் கூறினர். சரி, நமக்கு உள்ள செல்வாக்கை பயன்படுத்தி எப்படியாவது இதில் பறந்தவிட வேண்டும் என மனதில் நினைத்துக் கொண்டேன். அது போலவே வாய்ப்பும் கிட்டியது. அன்றைய தினம் ஜுமைரா Burj-Al-Arab-ல் இருந்து தொடங்கி Global Village வரை பறக்க திட்டமிட்டிருப்பதாக கூறினர். மனைவி குழந்தையுடன் ஜுமைரா Burj-Al-Arab போய் சேர்ந்தேன்.

பலூன் ஒவ்வொன்றாக காற்று நிரப்பி ஆயத்தப்படுத்தினார்கள். அப்போது ஒருங்கினைப்பாளர் ஒருவர் என்னிடம் வந்து யார் யார் பறக்க போகிறீர்கள் என்று கேட்டார். அதற்கு நான் , மனைவி மற்றும் குழந்தை என்றேன். இல்லை சார், குழந்தைகள் பறக்க அனுமதியில்லை என்று ஒரு குண்டை தூக்கி போட்டார். வேறென்ன, வழக்கமான தியாக மனதோடு நான் குழந்தையை பார்த்துக்கொள்வதாகவும் மனைவி மட்டும் பறக்கட்டும் என கூறினேன் (மனதிற்குள் எனதருமை குழந்தையால் எனக்கு கிட்டிய ஆப்பை நினைத்து வருந்தியபடி). நமக்கு ஆப்பு எந்தெந்த ரூபத்திலெல்லாம் வருது பாருங்க. ஆசிப் அண்ணாச்சி ஸ்டைலில் 'நல்லா இரு' என வழியனுப்பி வைத்தேன். என் மனைவி மட்டும் மகிழ்ச்சியாக பறந்தார்.

வந்துட்டு சும்மா போனா நல்லா இருக்காதே என, கையோடு கொண்டு போயிருந்த காமராவில் கொஞ்சம் க்ளிக்கித் தள்ளினேன். இதோ உங்கள் பார்வைக்காக சில..


ஜுமைரா Burj-Al-Arab


பலூன்களில் வெப்பக் காற்று நிரப்பப்படுகிறது


மனைவி பறந்த பலூன் ஆயத்தமாகிறது


மனைவி பறக்கிறார்






அன்று பிடித்தவைகளில் எனக்கு பிடித்தது

Monday, February 19, 2007

பார்க்கிங் தொல்லை

இன்னிக்கு காலையில வேலைக்கு அவசரமாக புறப்பட்டு கார்ல ஏறப்போனேன். அப்போ, பக்கத்து வண்டியை எங்க பில்டிங் வாட்ச்மேன் கழுவிக்கொண்டிருந்தார். "என்னது உங்க வண்டி முன்னாடி இடிபட்டிருக்கே" அப்படின்னார். எனக்கு தூக்கி வாரி போட்டது. என்னடா நமக்கு நேரம் சரியில்லையோன்னு ஓடிப் போயி பார்த்தேன். பெரிய அடி ஒன்னும் இல்லை. இருந்தாலும் நல்லா உரசியிருக்கு. பெயிண்ட் தான் கொஞ்சம் உறிஞ்சிருக்கு. அவர் இன்னிக்கு காலையில என்னோட வண்டியை கழுவும் போது பாத்தாராம். நான் தான் கவனிக்காம விட்டிருக்கேன்.

வீட்டுல பார்க் பண்ணியிருக்கும் போது இது நடந்திருக்க வாய்ப்பில்லை. நேத்து அலுவலகம் வந்தப்ப நிறுத்தியிருந்த பார்க்கிங்ல தான் ஏதோ ஒரு நாதாரி இடிச்சுட்டு ஓடியிருக்கு. என்ன பண்ண! காலையிலேயே போலிஸுக்கு தொலைபேசி பேப்பர் வாங்க நேரமில்லாததால் நானும் கெளம்பி அலுவலகம் வந்துட்டேன். என்ன செய்றதுன்னு அப்புறம் யோசிக்கலாம். அதுக்கிடையில இந்த பார்க்கிங் தொடர்பா ஒரு வீடியோ மின்னஞ்சல் ஒன்னு வந்தது. மனுசன் எப்படி பார்க் பண்றான்னு பாருங்களேன் இந்த வீடியோல. இவனோட சேர்ந்த ஏதோ ஒரு நாதாரி தான் என்னோட வண்டியையும் இடிச்சிருக்கனும். இவனுங்களையெல்லாம்.....

Tuesday, February 13, 2007

தமிழகத்தின் கனவு நாயகன்

காலையில நண்பன் ஒருத்தன்கிட்ட இருந்து ஒரு மெயில் இப்படி தலைப்பு போட்டுத்தாங்க வந்துச்சு. தொறந்து பாத்தவுடனே உச்சி முதல் உள்ளங்கால் வரை ஒரு சில்லிப்பு. அதாங்க திடீர்னு பயந்தா வருமே அது மாதிரி. இப்பவரைக்கும் கை கால் உதறுது. ஜுரம் வந்துடுமோன்னு கவலையா இருக்கு. அப்போவெ நம்ம வலையுலக தம்பி வீராச்சாமி படத்தை பாத்துட்டு போட்ட பதிவு பக்கம் போகவே பயமா இருந்துச்சு. இன்னிக்கு நமக்கு சனியன் மெயில் உருவத்துல வந்துருக்கான். ஏண்டா நண்பா! நான் ஒன்னோட சாப்பாட்டுல மண்ணையாடா அள்ளி வச்சேன். வதைச்சிட்டியேடா!

சரி சரி. நீங்களும் நம்ம கனவு நாயகனை பார்த்து ரசியுங்கள்.








Tuesday, February 06, 2007

கிரிக்கெட் நகைச்சுவை

ஒருவரின் மனைவி பிரசவத்திற்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். கனவருக்கு மருத்துவமனை செல்ல இயலாத நிலை. மருத்துவமனைக்கு ஃபோன் செய்கிறார் மனிதர் நிலவரம் அறிவதற்காக. ஆனால், தவறுதலாக அவருடைய call கிரிக்கெட் மைதானத்திற்கு செல்கிறது. நிலவரம் என்ன என்று அவர் கேட்கிறார். அங்கிருந்த வந்த பதிலை கேட்டபின் மயங்கி வீழ்கிறார்.

அப்படி என்ன சொனார்கள் அவர்கள்.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
இதை ஆங்கிலத்தில் சொன்னால்தன் சுவை.
They said:
"7 are already out. Hopefully 3 more will be out before lunch. And the first one was DUCK."