Monday, December 18, 2006

டேய்! எனக்கும் கம்பு சுத்த தெரியும்டா...

தெ.ஆ- இந்திய முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் பேட்டிங் பார்த்தவர்கள் அனைவரும் Srisanth-ன் கதகளி ஆட்டத்தை பார்த்திருப்பீர்கள். பொதுவாகவே வெள்ளைக்கார கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் Sledging / Abusing - ல் கில்லாடிகள். எதிரணியினரை கிண்டலடிப்பதையே பகுதி நேர விளையாட்டாக செய்பவர்கள். அதிலும் இந்த தெ.ஆ-வின் Andrew Nel ரொம்ப மோசம். எதற்கெடுத்தாலும் பேட்ஸ்மேன்களை திட்டுவார். முறைத்து பார்ப்பார். அதுபோலவே அவர் நம்ம Srisanth இடமும் நடந்து கொண்டார். அதற்கு அடுத்த பந்திலேயே சிக்ஸர் அடித்து Srisanth அவருடைய ஸ்டைலில் Nel-க்கு முன்பாக சென்று களிப்பாட்டம் ஆடி தனது கோபத்தை தீர்த்து கொண்டார். அதை நீங்களும் பார்க்க வேண்டுமெனில் கீழுள்ள வீடியோவை பாருங்கள்.



துபை - ஒரு குட்டி கேரளாவா?

யாரோ க்ராஃபிக்ஸ் குறும்பனின் கைவண்ணத்தில் எப்படியெல்லாம் துபை ஒரு குட்டி கேரளாவாக மாறியிருக்கிறது பாருங்கள். ஏற்கனவே துபையில் அதிகமான அளவில் மலையாளிகள் வசித்து வருகிறார்கள். ஒரு வேலை மலையாளிகள் இங்கு ஆட்சியை பிடித்தால் (சும்மா ஒரு பேச்சுக்குத்தான்) இக்காட்சிகள் காணக் கிடைக்குமோ!


படம்-1 : துபை Sheik Zayed சாலையில் ஓடும் கேரள அரசுப் பேருந்து.




படம்- 2 : Al Nasr Square - ல் கேரள அரசுப் பேருந்து, ஆட்டோ (ஓட்டோ) மற்றும் மலையாள விளம்பர தட்டிகள்.


படம் -3 : அழகான ஒரு பெட்டிக் கடை.


Saturday, December 16, 2006

இந்த அடி போதுமா???

இன்னிக்கு ஆஷஸ் மூனாவது மேட்சுல ஆஸியின் ரெண்டாவது இன்னிங்க்ஸில் சும்மா இங்கிலாந்து பவுலர்களை துவம்சம் செய்து, 59 பந்துகளில் பந்தை அங்கிட்டும் இங்கிட்டும் பறக்கவிட்டு 12 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களின் உதவியோடு 102 ரண் எடுத்த கில்கிரிஸ்ட் ஆட்டத்தை பத்தி சொல்ல வந்தென்னு நினைச்சீங்களா?
அட போங்கங்க, அவய்ங்க எப்படி, எக்கேடு கெட்டு போனா நமக்கு என்னங்க.

நான் 'இந்த அடி போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?' னு கேட்டது, நம்ம தல, சிக்ஸர் ஸ்பெஸலிஸ்ட், தாதா, கங்குலியின் அந்த பொன்னான இன்னிங்க்ஸ் பத்திங்க. வழக்கம் போல நம்ம அணியின் ஓப்பனர்கள் சொதப்ப, அதை தொடர்ந்து நம்ம வால் (i mean 'wall') தகர்ந்து போக, அதுக்கப்புறம் நம்ம 'ஒலக நாயகன்' சச்சின் பொறுப்பற்று அவுட் ஆக, லக்சுமனனும் அவரோடு வன (பெவிலியன்) வாசம் போக... வந்தாரு நம்ம தல. என்ன பொறுப்பு, என்ன கடமையுணர்வு. இவ்ளோ ப்ரெஸ்ஸர் குக்கர் சிச்சூவேஷன் தலைக்கு. இருந்தாலும் அசராம பொறுமையா ஆடி 51 நாட் அவுட். இதில் ஒரு புல் ஷாட் சிக்ஸும் அடக்கம். அவரோடு இன்னிங்க்ஸ் மட்டும் இல்லன்னா.... கஷ்ட காலம் இந்தியாவுக்கு. நல்ல வேளை தல கை கொடுத்தார். மிகவும் கடினமான் சூழ்நிலையில் அற்புதமான பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தாதாவை புகழாமல் என்னால் இருக்க முடியவில்லை.

இப்போது தென் ஆப்பிரிக்கா ஏற்கனவே 5/3. பார்த்துக் கொள்ளுங்கள் எவ்வளவு கடினமான ஆடுகளத்தில் தாதாவின் ஆட்டம் வெளிப்பட்டுள்ளது என்று. என்னென்ன சொன்னார்கள். பவுன்ஸர் அவரோட வீக்னஸ் blah blah.. தாதாவுக்கு வீசப்பட்ட ஒவ்வொரு மூன்றாவது பந்தும் பவுன்ஸர் தான். என்ன நடந்தது? நடந்தது என்னவோ இறுதி வரை நாட் அவுட்... தாதா உனக்கு இருக்கு துபையில் ஒரு கட் அவுட். :)

Tuesday, December 05, 2006

கிரிக்கெட் வீரர்களின் மின்னஞ்சல்...

நமது கிரிக்கெட் வீரர்களின் மின்னஞ்சல் முகவரிகள்:

1.LAXMAN:

available@home-only.com

2.GANGULY:

dada@only_kolkatta.com

3.KUMBLE:

only@test_match.com

4.SACHIN:

admitted@hospital.com

5.KAIF:

good@for_nothing.com

6.SEHWAG:

consistently@out_of_form.com

7.DRAVID :

stick@crease_like_fevicol.com

8.PATHAN:

takewickets@only_with_kenya.com

9. GREG CHAPPELL

only_experiment@noresult.com

10. Munaf Patel

only_line&length@nospeed.com

11.Harbhajan Singh

no_spinpitch@nowicket.com

12. Suresh Raina

why_i_am_there@god_knows.com

Thursday, November 30, 2006

தல வந்தாச்சு!!!



ஹேய்ய்ய்ய்ய்ய்ய்ய்!!!! தல வந்தாச்சு!! தல வந்தாச்சு!!
(புலி வருது! புலி வருது!! னு சொன்னாங்க... உண்மையிலேயே வங்கப்புலி வந்தாச்சு.)

Tuesday, November 28, 2006

வாங்கி கட்டிக்கொள்வது எப்படி?

என்னதான் லக்கி இந்த 'எப்படி' வகையான பதிவுகளை நிறுத்த சொன்னாலும். நம்மோட மனநிலை 'அவனை நிறுத்த சொல்லு, நான் நிறுத்துறேன்' தான். ஆனால், இது சமையல் குறிப்பு பதிவல்ல. 'செமை'யாக வாங்கி கட்டி கொண்டிருக்கும் நம்ம சாப்பல் பற்றியது.

இந்திய அணி மூன்றாவது போட்டியில் வழக்கம்போல் மானங்கெட்டு தோற்றதை அனேகமாக எல்லாரும் மறந்திருக்கலாம் (அதானெ நம்ம மக்களின் அரிய குணம்). அந்த போட்டி முடிந்த பிறகு நடந்த ஊடக கூட்டத்தில் பதிலளிக்கையில்

'எம்.பிக்களின் கருத்து எனக்கு ஆச்சர்யம் அளிக்கவில்லை. அவ்வாறு பேசுவதற்கே
அவர்களுக்கு பணம் கொடுக்கப்படுகிறது' என்று கூறினார்.

இவர் மேல் ஏற்கனவே வெறுத்து போயிருந்தவர்கள் இதை விடுவார்களா? உண்டு இல்லை என்றாக்கிவிட்டார்கள் நேற்றைய பாராளுமன்ற கூட்டத்தை. நாட்டு மக்களின் அன்றாட/நெடுங்கால பிரச்சனைகளை பேசி கலைய துப்பிள்ளாதவர்கள். உலகின் மிகப்பெரிய மக்களாட்சியை கிண்டலடித்த சாப்பல் கண்டிப்பாக கண்டிக்கபட வேண்டியவர்தான். இவர் யார் இந்திய எம்.பிக்களை பற்றி பேச? இந்திய பாராளுமன்றத்தில் கிரிக்கெட் பற்றிய விவாதம் வரலாம் தான். கிரிக்கெட் துறையும் இந்திய அரசுக்கு உட்பட்டது தானே? அதனால் எம்.பிக்கள் கிரிக்கெட் பற்றி பேச உரிமை இருக்கிறது. ஆனால், சகிக்க முடியாதது என்னவெனில் இவர்களின் அக்கறை கிரிக்கெட் தவிர்த்து மற்ற விளையாட்டுக்களில் இல்லை. ஹாக்கி துறை நாறி கிடக்கிறது. தடகளத்துறை, அய்யோ கேட்கவே வேண்டாம். அதை பற்றி பேசி தேசிய விளையாட்டான ஹாக்கியை, தேங்கி கிடக்கும் தடகளத்துறையை மேம்படுத்த இவர்களுக்கில்லாத அக்கறை கிரிக்கெட்டின் மீது மட்டும் ஏன்? கத்தை கத்தையாக பணம் புழங்குமிடம் என்பதாலா? உலகிலேயே பணக்கார விளையாட்டு வாரியம் நம் கிரிக்கெட் வாரியம் தான். நம் நாட்டு கிரிக்கெட்டிற்கு சாபம் என்றுதான் சொல்லவேண்டும், ஒரு பழுத்த அரசியல் வாதி கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருப்பது. கிரிக்கெட் விளையாடாமல் அரசியல் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் இவர்கள்.

இந்நிலையில் நேற்று பல தரப்புகளின் கண்டனத்திற்கு ஆளானார் சாப்பல். எம்.பிக்கள் சாப்பலை கண்டித்ததோடு அவரை எச்சரிக்கையாக பேசும்படியும் கூறினர். பி.ஜே.பியின் நாடாளுமன்ற செய்தி தொடர்பாளர் இது குறித்து கூறுகையில்,
'இந்திய அணியின் தொடர் தோல்விகளை நிறுத்த சரத் பவார் விரைவில நடவடிக்கை எடுக்க
வேண்டும்' என்று கூறினார்.
'இந்திய அணியின் தொடர் தோல்விகளுக்கு சாப்பல் தான்
காரணம். அவரை உடனே பணி நீக்கம் செய்ய வேண்டும்' என்று குடியரசு கட்சியின் எம்.பி
ராம்தாஸ் த்வாலே கூறினார்.
இதோடில்லாமல் கம்யூனிஸ்டுகள் (ஏற்கனவே கங்குலி
சர்ச்சையில் சாப்பல் மேல் கடுப்பாக இருப்பவர்கள்) சாப்பலை கார சாரமா திட்டி
தீர்த்தனர்.


மேலும், கட்சி பாகுபாடில்லாமல் (இந்த ஒரு விஷயத்திலாவது ஒன்று சேர்ந்தார்களே) அனைத்து கட்சியினரும் இது குறித்துன் கண்டனம் தெரிவித்ததோடு இந்திய அணியின் தோல்வி குறித்து கவலை தெரிவித்தனர்.

இது மட்டுமில்லாமல் முகம்மது கைஃபின் வீட்டின் மீது கல்லெறியும் நடத்தியுள்ளனர் ஒரு கூட்டத்தினர். நேற்று சாலை முழுவதும் சாப்பல் எரிக்கப்பட்டார் (பொம்மைதான்). இந்திய அணியினர் செருப்படி வாங்கினர். (இதையெல்லாம் சத்தியமா நான் எதிர்பார்த்தேன்). இந்திய ரசிகர்களின் இந்த செயல் ஒரு தோல்வியின் பின் விளைவல்ல ஒரு ஆண்டில் இந்திய சந்தித்து தொடர் தோல்விகளின் விளைவாக எனக்கு தெரிகிறது. எதுவாயினும் இச்செயல் பண்பாடற்றது. இதற்கிடையில், சிலர் சந்துல சிந்து பாடுவது கங்குலி புகழ் பாடினர். 'சவுரவ் ஹமாரா கவுரவ்', 'கங்குலி தி ப்ரைட் ஆஃப் இந்தியா' என்றும் எழுதி காண்பித்து தங்களது ஆதங்கத்தை தீர்த்துக்கொண்டனர்.

முடிவாக, சாப்பல் எம்.பிக்களை விமர்சித்தது தேவையற்றது. கிரிக்கெட்டின் மீது மட்டும் இந்தளவு அக்கறை காட்டும் அரசியல்வாதிகளும் என் கண்டனத்திற்குரியவர்கள். இந்திய அணியின் மானங்கெட்ட தோல்விகளுக்கு காரணமான அரசியல், முறையற்ற தேர்வு முறை, செத்த ஆடுகளங்கள், வெறியில்லாத சூடு சுரணையற்ற வீரர்கள் மற்றும் அணியின் ஒற்றுமையை குலைத்து வரும் பயிர்ச்சியாளர் இவர்கள் அனைவரும் பொறுப்பேற்க வேண்டும்.

ஜான் ரைட்டின் நான்காண்டுகளில் இல்லாத/வெளிவராத பிரச்சனைகள், தோல்விகள் சாப்பலின் இந்த இரண்டாண்டுகளில். இப்படியே போனால்.......??????

Sunday, November 26, 2006

தீவிரவாதி 'கெம்ப்'பிற்கு கண்டனம்

இந்தியர்களுக்கு எதிராக சற்று முன் தென் ஆப்பிரிக்காவில் வன்முறை வெறியாட்டம் நடத்திய தீவிரவாதி கெம்ப்-ன் வன் செயலை கண்டித்து நாளை இந்திய பாராளுமன்றத்தின் இரு அவைகளும் இயங்காமல் ஒரு நாள் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்படுகிறது. இதை அறிவித்த சுற்றுப்புற சூழல் அமைச்சர் கூறியதாவது:

இன்று நடத்தப்பட்ட இந்த வெறியாட்டத்தை வன்மையாக கண்டிப்பதோடு, கெம்ப் அடிக்கடி
சிக்ஸ் அடித்து வானத்தில் OZONE -ல் ஓட்டை ஏற்படுத்தியதையும் கண்டிக்கிறேன். இது குறித்து
சர்வதேச சுற்றுப்புற அமைப்பிற்கும் புகார் கொடுக்கப்படும்.


வெறிகொண்ட வேங்கை கெம்ப் இந்த வெறியாட்டத்தில் 89 பந்துகளில் 6 பவுண்டரிகளும் 7 சிக்ஸர்களும் அடித்து நூறடித்து இந்தியாவின் மானத்தை நாறடித்தார். இதை நமது வலையுளக அன்பர்களும் கண்டிக்க வேண்டுகிறேன்.

இன்னிக்கு என்ன நடக்குதுன்னு பாக்கலாம்.

அய்யாக்களே! அம்மாக்களே! இந்திய பார்லிமெண்டையே உலுக்கி போட்ட இந்திய அணியின் மானங்கெட்ட தோல்விக்குப் பின் இன்னிக்கு மூனாவது போட்டி தொடங்கி நடந்து வருகிறது. இதுவரை பார்த்த வரைக்கும் ஓஹோனு தான் பவுலிங் செய்றாய்ங்க நம்ம பசங்க (அந்த வள்ளல் அகர்கரை தவிர). பாக்கலாம் இன்னும் என்ன நடக்குதுன்னு. இவய்ங்கள நம்பி எதையும் நாம சொல்ல முடியல. ஜாஹிர் கான் கலக்கிட்டாரு முதல் ஸ்பெல்லில். விக்கெட் எப்படி விழுந்துச்சுனு பாக்கலாமா?

முதல் விக்கெட்:


0.2
Khan to Smith, OUT, bowled 'em! A tad fuller this time, 133.2ks on a
sweet spot, swings in and beats Smith's tame forward drive, ball sneaks through
bat and pad and crashes into off stump, big wicket, well bowled Zaheer Khan!
GC Smith b Khan 0 (2m 2b 0x4 0x6) SR: 0.00


இரண்டாவது விக்கெட்:


0.4
Khan to Kallis, OUT, GONE! Whoah Nelly! Full, fast and moving away from
him, 130.4ks Kallis reaches a long way for it, has a big swish at that and can
only nick it through to Tendulkar at first slip! Huge wicket, Zak's back!
JH
Kallis c Tendulkar b Khan 0 (2m 2b 0x4 0x6) SR: 0.00


மூன்றாவது விக்கெட்:


10.4
Khan to Bosman, OUT, GONE! Full outside off stump, an impetuous Bosman
has a full-blooded drive at that, kitchen sink and all, as they say, and can
only get a thick edge to Tendulkar at first slip, who jumps up and pouches a
good catch moving to his left, Zaheer gets another
LL Bosman c Tendulkar b
Khan 6 (46m 26b 1x4 0x6) SR: 23.07


நான்காவது விக்கெட்:


11.6
Pathan to Gibbs, OUT, gone! A rank half-volley outside off stump,
begging to be hit, Gibbs gets onto bended knee and can only smack that in the
air to Kaif at short extra cover, he takes a simple catch and Gibbs has to go, a
tame dismissal
HH Gibbs c Kaif b Pathan 35 (49m 40b 7x4 0x6) SR: 87.50


ஐந்தாவது விக்கெட்:


18.5
Kumble to de Villiers, 1 run, OUT, poor running, and thats out! Tossed
up, de Villiers gets to the pitch of it and drives in the gap at cover, calls
for the second but Boucher is struggling, Pathan covers good ground, swoops in
and fires the throw high over Kumble, who jumps, catches it and drops it down
onto the stumps and Boucher is out, ever so marginally
MV Boucher run out 4
(36m 16b 0x4 0x6) SR: 25.00


ஆறாவது விக்கெட்:


19.2
Agarkar to de Villiers, OUT, but Agarkar wins this battle! Shortish
outside off stump and de Villiers decides to have a tickle at it and gets a
thick edge through to Dhoni, moving to his left, India on a roll!
AB de
Villiers c Dhoni b Agarkar 29 (47m 30b 5x4 0x6) SR: 96.66
ஏழாவது விக்கெட்:

35.5 Harbhajan Singh to Pollock, OUT, what an effort! Pollock taps the ball
towards short cover and takes off for a single but Kemp sends him back. Dhoni
moves across quickly and has a shy at the stumps, Kaif moves in behind the
stumps from short leg, stretches across - collects the ball and deflects it into
the stumps and Pollock is out by a long way - crucial wicket this. SM Pollock
run out 33 (59m 50b 5x4 0x6) SR: 66.00


இப்போதய நிலவரம்: தெ.ஆ - 144/7 (37.2)

இந்திய அணியை நம்பி பெட் கட்ட விரும்புவர்கள் வரேவேற்கபடுகிறார்கள்.

Saturday, November 25, 2006

குஜராத்தி இரத்தம்

இணையத்தில் உலவிவரும் நகைச்சுவை துனுக்குகளில் ஒரு குறிப்பிட்ட இனத்தை வைத்து கேளி செய்து வரும் துனுக்குகளும் உண்டென்பது அறிந்ததே. அதில் மிக கூடுதலாக வருவது சர்தார்களை (பஞ்சாபிகளை) வைத்தே. அவர்களை முட்டாள்களாக (குண்டக்க மண்டக்க வகை) சித்தரித்தே வரும். அதே போல் குஜராத்திகளை பற்றி வருபவை அவர்களை கஞ்சர்களாக சித்தரித்தே வரும். அவ்வகையச் சார்ந்த ஒன்று எனக்கு மின்னஞ்சலில் வந்தது. முடிந்தால் நீங்களும் சிரித்துவிட்டு செல்லுங்கள்.

அரபி ஒருவர் இதய மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்காக மும்பை லீலாவதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அதற்காக தேவைப்படும் (அவருடையதோ அரிய வகை) இரத்தத்திற்காக மருத்துவர் உலகளவில் விளம்பர படுத்துகிறார். இறுதியாக, பரோடாவைச் சார்ந்த குஜராத்தி ஒருவர் அரபிக்காக இரத்த நன்கொடை செய்ய முன் வருகிறார்.

அறுவை சிகிச்சையும் வெற்றிகரமாக முடிந்து தாயகம் திரும்பிய அரபி, குஜராத்தியின் நல்லெண்ணத்தை வியந்து அவருக்கு பரிசாக ஒரு டொயொட்டா 4 வீலர், வைரங்கள், நகைகள் மற்றும் ஒரு மில்லியன் அமெரிக்க டாலரும் அனுப்பிவைக்கிறார்.

பின்பொரு நாள் அதே அரபிக்கு சரி செய்யும் அறுவை சிகிச்சை செய்ய நேரிடுகிறது. மீண்டும் அதே மருத்துவமனைக்கு வருகிறார். அதே குஜாராத்திக்கு மருத்துவர் சொல்லி அனுப்புகிறார் இரத்த நன்கொடைக்காக. குஜராத்தியும் மகிழ்ச்சியுடன் ஒப்பிக் கொண்டு இரத்தம் வழங்குகிறார்.

இரண்டாவது முறையாக அறுவை சிகிச்சை முடிந்து சென்ற அரபி, அந்த குஜராத்திக்கு வெறும் நன்றி சொல்லும் அஞ்சலட்டையும், கொஞ்சம் இனிப்புகள் மட்டும் அனுப்பி வைக்கிறார். இதைப் பார்த்த குஜராத்தி அதிர்ச்சியடைகிறார்.

அரபியிடம் இதைப் பற்றி கேட்டு விடுவது என முடிவெடுத்து, அரபியிடம் தொலைபேசியில் "நீங்கள் முதல் முறை போலவே இம்முறையும் நல்ல பரிசு தருவீர்கள் என எதிர்பார்த்தேன், ஆனால் நீங்கள் ஏன் இவ்வாறு செய்தீர்கள்?" என்று கேட்டார்.

அதற்கு அந்த அரபி "இம்முறை என் உடலில் ஓடுவது குஜராத்தி இரத்தமல்லவா" என்றார்.

Sunday, November 19, 2006

அடிக்கு மேல் அடி

அனைத்து அணிகளும் உலக கோப்பையை எதிர்நோக்கி சரியான பாதையில் பயணித்துக் கொண்டிருக்கும் வேளையில் இந்திய அணி மட்டும் எதிர் திசையில். பாகிஸ்தான் அணி கூட சமீபத்திய அக்தர், ஆஸிஃப் ஊக்க மருந்து பிரச்சனைகளையும் தாண்டி பலம் பெற்றுவரும் மேற்கிந்திய அணியை முதல் டெஸ்டில் வென்றுவிட்டது. ஆனால் பாருங்கள் நமது அணியை! அடிக்கு மேல் அடி சறுக்கிகொண்டே போகிறது.

இந்திய அணி 5 ஒரு நாள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் ஆடுவதற்காக தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டிருப்பது அனைவரும் அறிந்ததே. (அணி தோல்வி முகத்தில் செல்லும் போது பவுன்ஸி தென் ஆப்பிரிக்காவிற்கு போகனுமா? :) ) யுவராஜ் காயமாதலால் தென் ஆப்பிரிக்கா சுற்றுப் பயணம் செல்லவில்லை. இவருக்கு காயம் எப்படி ஏற்பட்டது தெரியுமா? பயிற்சியின் போது கோ-கோ விளையாடும் போதாம். கொடுமைங்கோ. கோ-கோ கூட ஒழுங்கா விளையாடத் தெரியாதுன்னு நினைக்கிறேன். இப்போ ஸேவாக் காயம். இதுவும் பயிற்சியின் போதாம். அவரும் இன்று நடை பெற இருக்கும் முதல் ஒரு நாள் போட்டியில் விளையாட மாட்டார் என செய்திகள் வருகிறது. ஏற்கனவே முதல் பயிற்சி ஆட்டத்தில் தோற்றாகிவிட்டது. எது வரை செல்லும் இந்த செல்லும் இந்த தோல்வி பயணம் என்பது தான் எனது கேள்வி. நெடு நாட்களுக்கு பின் மீண்டும் அணிக்கு வந்துள்ள ஜாகிர் மற்றும் கும்ப்ளே தான் பயிற்சி ஆட்டத்தில் ஜொலித்தவர்கள். இதிலிருந்து என்ன தெரிகிறது? ஓல்ட் இஸ் கோல்ட். :)

காயம் ஒரு பக்கம் பலம் வாய்ந்த தெ.ஆ அணி ஒரு பக்கம் எகிறும் ஆடுகளங்கள் ஒரு பக்கம் பொறுமையிழந்து வீரர்களின் உடமைகளை எரிக்க காத்திருக்கும் ரசிகர்கள் ஒரு பக்கம் அதற்கும் மேலாக தோற்றால் நார் நாராக அக்கு வேரு ஆணி வேராக கிழிக்க காத்திருக்கும் ஊடகங்கள் மற்றொரு பக்கம் என இந்திய அணிக்கு பெரிய நெருக்கடியான சூழ்நிலை. சமாளிக்குமா நம் அணி?

Monday, November 06, 2006

ஆஸ்திரேலியா நல்ல(வர்கள்) அணியா?

யார் யாரு ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை இறுதி போட்டி பார்த்தது? யார் யாரு கடைசிவரை பொறுமையா உக்காந்து ஆஸ்திரேலியா கோப்பையை கையில வாங்கும் வரை பார்த்தது? கொஞ்சம் கை தூக்குங்க. நம்ம அணி நாறிப் போனாலும் நான் ஆஸ்திரேலியா பேட்டிங், அப்புறம் பரிசு வழங்கும் காட்சிவரை பொறுமையா உக்காந்து பாத்தேனுங்க. என்ன இருந்தாலும் ஆஸ்திரேலியா ஆஸ்திரேலியாதான். ஒரு பக்கம் கெய்லும், சந்திரபாலும் வெளுத்து வாங்கினாலும் போராடி 138க்கு சுருட்டிப்புட்டானுங்க. அப்போவே தெரிஞ்சு போச்சு இந்த கோப்பை மஞ்சளுக்குத் தான். இப்போதைக்கு கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவை பயமுறுத்துவது மழை மட்டுமே. :)




சரி, நம்ம மேட்டருக்கு வருவோம். பரிசு வழங்கும் நிகழ்ச்சியின் போது நடந்த ஒரு சின்ன மேட்டர் தாங்க மனசை உறுத்துச்சு. அதாவது, எப்படா கோப்பையை கையில வாங்குவோம்னு ஆர்வமா(வெறியா) ஆஸ்திரேலியாக்காரனுங்க நின்னுகிட்டு இருக்க. அதை வழங்க நம்ம அமைச்சர் கம் பிசிசிஐ தலைவர் ஷரத் பவார் நிக்க. ரிக்கி பாண்டிங் பொறுமை தாங்காம பவார் தோளைத் தட்டி 'கப்பை கொடு'னு கேட்டு வாங்குனாரு. அது போதாதுனு, இரண்டு வினாடி பவார் அங்கேயே ஃபோட்டோக்கு போஸ் கொடுக்க, அது ஆஸ்திரேலியா அணியை மறைக்குதுனு சொல்லி மார்டின் நம்ம பவாரின் தோளைப்பிடித்து, பின் முதுகைப் பிடித்து மெதுவாக தள்ளி (இடத்தை காலி பண்ணு என்று சொல்ற மாதிரி இருந்துச்சு) மாறி நிக்க சொல்கிறார். பவாரும் கண்டுக்காதவர்போல் இடத்தை காலி செய்கிறார். இதை பார்த்த எனக்கு அதிர்ச்சி. இது என்ன கொடுமை. என்னதான் விளையாட்டில் வெறி இருந்தாலும் மேடையில் நிற்கும் ஒரு பெரியவரிடம் நடந்து கொள்ளும் முறையா இது? அதுவும் கேப்டன்? சே! ஆஸ்திரேலியாவின் ஆட்டத்தை ரசித்த என்னால் இதை சகிக்க முடியவில்லை. ஆட்டம் படித்த வீரர்கள் பண்பாடு படிப்பது எப்போது? காலையில் செய்திகளில் இதைப் பற்றி ஒன்றும் இல்லை. ஆனால், மாலையில் சச்சின் இதைப் பற்றி வருத்தம் தெரிவித்ததாக செய்தி வந்துள்ளது.



"I wasn't watching the proceedings because I was travelling, but from what I heard (from others) it was an unpleasant experience which was uncalled for (action), Firstly, it should not have happened. It's important to show respect to the person who is so dear to the cricketers and is involved with cricket. So it's good that we avoid such incidents"
-சச்சின்



The picture in the Indian Express came under the headline: "This is how
champions behave when they get the trophy." The Times of India added: "They are supposed to be aggressive, even rude on the field. On Sunday, Australia showed they are not exactly polite off it too."
-ஊடகங்கள்



Dilip Vengsarkar, India's chief cricket selector added: "You expect such
behaviour from uneducated people. If they wanted to pose for photographs, they could have politely requested him. This is appalling."
-வெங்க்சர்க்கார்



Niranjan Shah, the BCCI secretary, described the incident as
"unintentional", but he also said players "seem to leave good sense behind". "Anyway, you know how players are once they get on the cricket field."
-நிரஞ்சன் ஷா



However, Pawar laughed off the incident. "It was a small thing, a stupid
thing," Pawar said in the Hindustan Times. "I don't want to react."
-ஷரத் பவார்
-----------------
இது தொடர்பான தற்போதைய நிலவரம்:
இந்த அவமதிப்பு செயல் இப்போது கிரிக்கெட் வட்டாரத்தை மெதுவாக உலுக்க தொடங்கி உள்ளது. ரசிகர்களும் அவர்களின் எதிர்ப்பை காட்டி வருகிறார்கள்.



இது பற்றி ஆஸ்திரேலிய வாரியம், வீரர்கள் இப்போது தான் நாடு திரும்பி இருக்கிறார்கள். விசாரனை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளது.

பார்க்கலாம் என்ன சொல்கிறார்கள் என்று.

Sunday, November 05, 2006

லொடுக்கான கதை

நமக்கு கிரிக்கெட்னா உசுருங்க. இருக்காதா பின்ன இந்தியனாச்சே. நான் கிரிக்கெட் பாக்க தொடங்கியது 1987 உலக கோப்பையிலிருந்து தான். அப்போ நம்ம பழய தல அசார்தான் ஹீரோ. அதுனால அவரே எனக்கும் ரோல் மாடல் (சூதாட்டம் அவர் செய்திருந்தது உண்மையெனில் அது தவிர்த்து). அப்போ புடிச்ச கிரிக்கெட் சனியன் என்னை இன்னும் உட்ட மாதிரி இல்லங்க. இந்த கிரிக்கெட்னால நான் என்னோட வீட்டுல வாங்கின அடி உதை திட்டுக்கு கொறவில்லங்க. இப்போ வரைக்கும் பொண்டாட்டிகிட்ட திட்டு தான். என்ன செய்ய சனியனை உட்டுத் தொலைக்க முடியல.


சரி மேட்டருக்கு வருவோம். பதிவெழுதவதற்காக ஒரு வித்தியாசமான பேரு போட யோசிச்சப்ப 'நந்தா' படத்துல கருணாஸ் கேரக்டர் பேரு ஞாபகம் வந்துச்சு. அதுல அவரு கொஞ்சம் தெந்தி தெந்தி நடப்பாருங்க. அதுனால அவருக்கு அதுல 'லொடுக்கு' பாண்டினு பேரு. பேரு வித்தியாசமா இருந்துச்சு. சரி அதையே வச்சுக்கலாம்னு வச்சுட்டேன். இப்போ பாத்தீங்கன்னா என்னோட நிலமையும் அவரை மாதிரியே தெந்தி தெந்தி நடக்க வேண்டியதா போச்சு. எல்லாம் இந்த சனியன் கிரிக்கெட்னால வந்த வெனை. வயாசிகிடுச்சுனு உடம்பு சொன்ன போதுமா மனசு இன்னும் எளமையாத் தானே இருக்குனு நானும் கிரிக்கெட் ஆட கெளம்பிட்டேன். எங்க நிறுவனத்துல கிரிக்கெட் டீம் ஒன்னு இருக்குங்க. அதுல நானும் உண்டுங்க. துபையில நடக்குற டிவிஷன் லெவெல் (A , B , C னு பல லெவல் இருக்கு) பங்கெடுக்குறது வழக்கம். கோடை காலம் முடிஞ்சு இப்போ சீஸன் தொடங்கியாச்சு. எங்க நிறுவனத்துக்குள்ள பல டீம்கள் உருவாக்கி Inter Company Tournament நடக்கும். இந்த முறையும் இன்னும் சில நாட்களில் நடக்க இருக்கிறது. அதுக்காக நம்ம பசங்களோட போன வியாழக்கிழமை ப்ராக்டீஸ் பண்ணப் போனப்ப தான் இந்த வினை நடந்துச்சு. ப்ராக்டீஸ் முடியப்போகும் நேரத்துல காலில் இருந்து 'கடக்'னு ஒரு சத்தம். உடனே உயிர் போகும் வலி. காலை நகத்த முடியல. அப்போதான் பழய காயம் ஞாபகம் வந்துச்சு. ஆமாங்க, 5 ஆண்டுக்கு முன்னாடி கிரிக்கெட் ஆடும்போது, முழங்காலில் (மூட்டு சந்திப்பில்) உள்ள லெக்மா ஸ்ட்ரெச் ஆகிவிட்டது. அது சரியாக பல மாதங்கள் ஆனது. அதுக்கிடையில் knee-band இல்லாமல் விளையாடும் போதெல்லாம் வலி எடுக்கும். இப்போதும் மறந்து போய் knee-band அணியாமல் விளையாடச்சென்று விட்டேன். அதான் இப்படி ஆகிவிட்டது. சிறிது சிறிதாக வலி குறைந்து வருகிறது. சீக்கிரம் குணமாக இறைவனை வேண்டுவோம். இன்னும் 10 நாட்களில் குணமாகவில்லையெனில் எங்கள் அணி ஒரு ஸ்டார் ப்ளேயரை இழக்க வேண்டியிருக்கும். :)


பதிவெழுத தேர்ந்தெடுத்த பெயருக்கான பெயர்காரணம் இப்போது தான் அமைந்தது. அதான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள இந்த பதிவு.

Saturday, November 04, 2006

சன்னும், ஜெயாவும் இல்லாவிடில்....

ரொம்ப நாளாவே மனசுல உறுத்திக்கிட்டு இருக்கிற ஒரு செய்திங்க. தமிழ்கூறும் நல்லுலகிற்கு தொண்டாற்றி வரும் ரெண்டு சேனல்களைப் பற்றிய செய்திங்க. அதிலும் அவர்களின் செய்திகளைப் பற்றிய செய்திங்க.

ஆமாங்க. உலகில் உள்ள தமிழர்களுக்கு அவர்களின் அன்றாடப் பொழுதே இந்த ரெண்டும் இல்லன்னா போவதே கொஞ்சம் கடினம் தாங்க. ரெண்டில் ஒன்றில்லன்னாலும் ஒன்றாவது வேணும். ரெண்டும் இருந்தால் மிகச் சிறப்பு. ரெண்டும் இல்லன்னா எங்கேயோ ஒரு இருட்டுலகில் நீங்கள் வாழ்ந்து வருகிறீர்கள் என்று பொருள். காமெடி இல்லங்க சீரியசாத் தான் சொல்றேன். இந்த இரண்டு பேரும் போட்டி போட்டுக்கொண்டு சீரியல்களால் தமிழ் பெண்களை (கனிசமான ஆண்களும் உண்டென்பது எனது வாதம்) அழவைப்பது தவறானது என்று எடுத்துக்கொண்டாலும், இந்த இரண்டு சேனல்களின் செய்திகள் மிக அருமைங்க. நீங்கள் இந்த இரண்டு சேனல்களும் கிடைக்கப் பெற்றிருந்தீர்களெனில் நீங்கள் கொடுத்து வைத்தவர். இருவரின் செய்திகளையும் தவறாது கண்டு வாருங்கள் (கண்டு வருபவர்களுக்குத் தெரியும்). தமிழகத்தில் நடக்கும் அரசியல் அட்டூழியங்கள் அம்பலமாகும். எதிர்கட்சியின் தகிடுதத்தங்கள் சன் டிவியில் அலசி ஆராய்ந்து அக்கு வேறு ஆணி வேராக காட்டுவார்கள். 'அவர்கள் மட்டும் ஒழுங்கா என்ன' என வரிந்து கட்டிக்கொண்டு ஜெயாவில் ஆளுங்கட்சி (மைனாரிட்டி)யின் அராஜகம் என அம்பலப்படுத்தப்படும். அரசியல் கட்சிகளின் நன்மைகள் (செஞ்சாத்தானே ??) நமக்குத் தெரிய வருகின்றதோ இல்லையோ, அவர்கள் செய்யும் அஜால் குஜால்கள் தெரிய வருகின்றது. மாறி மாறி சேறு வாரி இறைப்பது ஒரு வகைக்கு நல்லது தான். சில நேரங்களில் நகைச்சுவைக் காட்சிகள் கூட தோற்கும். இதற்காகவாவது இருவருக்கும் நாம் நன்றி செலுத்த கடமைப்பட்டிருக்கிறோம் (ரெண்டு பேருக்கும் ஓட்டு போடுங்க).


நீங்களே யோசிச்சுப் பாருங்க, இந்த இரண்டு சேனல்களும் இல்லாவிடில்.....

Sunday, October 29, 2006

ஜெயிச்சு தொலைங்கடா!

இன்று தெரியும் இந்தியாவின் வண்டவாளம். ஆமாம், நடந்து வரும் ஐசிசி சாம்பியன் கோப்பை போட்டியின் சுற்று போட்டிகளின் இறுதி போட்டி இன்று. கிட்டத்தட்ட காலிறுதி மாதிரித்தான். வெல்லும் அணி அரையிறுதிச் செல்லும். எனக்குத் தெரிந்து ஏழெட்டு ஆண்டுகளா அசராம கலக்கி வரும் ஆஸ்திரேலியா கூடத்தான் நமக்கு ஆட்டம் இன்னிக்கு. பாக்கலாம் நம்ம பசங்க என்ன பண்றாய்ங்கன்னு.


இந்த ஆண்டு தொடக்கத்தில் மேற்கிந்திய சுற்றுப் பயணத்தில் தோற்க தொடங்கிய நம்ம அணி இன்னும் அதை மறக்காம் செஞ்சுக்கிட்டு இருக்கு. அணியோட மனநிலை சுத்தமா தன்னம்பிக்கை வீழ்ந்து கிடக்கு. இதுக்கெடையில, பட்டகாலிலே படும்னு சொல்ற மாதிரி, மேலும் ரெண்டு மூனு இடி நம்ம அணிக்கு விழுந்துருக்குங்க. அகார்கர் காயத்தினால் வெளியேறிவிட்டடார். யுவராஜ்சிங்கும் அவரை தொடர்ந்து 'நீ மட்டும் சாட்டு போடுவியா' னு அகார்கர்கிட்ட சொல்லிகிட்டே அவரும் காலில் காயம்பட்டு வெளியே. முனாஃபிற்கும் காயம் என்று சொல்லப்படுகிறது. ஆடுகளங்கள் வேறே ரணகளமா இருக்கு. இவற்றை எல்லாம் மீறி நம் அணி வெல்லுமா?


அப்புறம் நம்ம அணியிலேயே உஷாரா ஆஸ்திரேலியாகாரய்ங்க ஒரு சதிகாரனை வச்சிருக்காய்ங்க. அதாங்க நம்ம கோச். நல்ல கோச் போங்க. எத்தனை பேரு வாயில இருந்துட்டான் இந்தாளு. இந்தாளு நாசமாக்குன வீரர்களின் பட்டியல்ல லேட்டஸ்ட் கைஃப். ஒழுங்க ஆடிட்டுருந்தவன் நம்பிக்கையை 'உள்ளே வெளியே' ஆடி நாசாமாக்கிட்டாரு. அனேகமா இன்னிக்கு கைஃபுக்கு சான்ஸ் கிடைக்கும். எல்லாம் ஒரு தற்காலிகம் தான். சாப்பலோட எக்ஸ்பெரிமென்ட் வேறே இன்னும் முடிஞ்ச மாதிரி தெரியல. அனேகமா இன்னிக்கு ஓபனிங் பவுலிங் நம்ம ட்ராவிட் செஞ்சாலும் ஆச்சர்யப்படுவதுக்கில்ல. என்னமாச்சும் பண்ணி ஜெயிச்சு தொலைங்கடா! உங்க பின்னாடி அலைஞ்சுக்கிட்டு, நாங்களும் ஒழுங்கா கஞ்சி தண்ணி இல்லாம, வேலை வெட்டி பாக்காம... என்னத்த சொல்றது போங்க....

Saturday, October 28, 2006

இந்தியாவில் ரன்னுக்கு பஞ்சமா?

காண்பதென்ன கனவா இல்லை நனவா? என்று எல்லோரும் தன்னைத் தானே ஒரு முறை கிள்ளிப் பார்த்துக் கொள்ள வேண்டியதாயிற்று இந்த முறை இந்தியாவில் நடக்கும் ICC Champion's Trophy முடிவுகளை பார்த்து. பிறகென்னங்க, இந்திய ஆடுகளங்கள் என்றாலே மட்டையாளர்கள் எல்லாம் வாயில் ரன் ஊறி விளாசித் தள்ளி ஓட்டக் குவியலை எடுத்துக் கொண்டிருந்த காலம் போய், இப்போ அணி 150 எடுப்பதற்கே போதும் போதும் என்றாகிவிடுகிறதே. முன்பெல்லாம் இந்தியாவில் 300 ஓட்டங்கள் எடுப்பது எளிதாயிருந்தது, அதிலும் கூத்து அதையும் எதிரணி சேஸ் செய்து விடுவது. இந்திய ஆடுகளங்கள் பந்து வீச்சாளர்களின் மயானம் என்றழைத்தார்கள்.


ஆனால், இப்போது நிலைமை தலைகீழ். பந்து வீச்சாளர்கள் காட்டில் அடை மழை பெய்து கொண்டிருக்கிறது. பந்து எகிரி குதித்து வருகிறது. மட்டையாளர்கள் காதோரம் ரீங்காரம் பாடிச் செல்கிறது பந்து. இது இந்தியாதானா என்று பந்து வீச்சாளர்களே வியக்கும் அளவிற்கு. என்னைப் பொருத்த வரை இதுவே சரியான ஆடுகளங்கள். ஆஸ்திரேலியாவின் பெர்த் அளவிற்கு இல்லையென்றாலும் பந்து வீச்சாளர்களை சாகடிக்காத ஆடுகளங்கள் இந்த முறை உருவாக்கப்பட்டுள்ளன. இதில் ICC- Pitch Specialist -ம் ஏதோ ஒன்றை ஆடுகளம் இறுதி வரை பிடிப்போடு இருக்க ஸ்ப்ரே செய்கிறாராம். இதையெல்லாம் சற்றும் எதிர் பார்த்திராத மட்டையாளர்கள் பெவிலியனுக்கும் பிட்சுக்கும் இடையே வை.கோ (அதாங்க நடை பயணம்) செய்து கொண்டிருக்கிறார்கள். கீழ்கண்ட ஸ்கோர் போர்டை பார்த்தால் நிலமை புரியும்:

Eng- 125/10 (37)
Ind - 126/6 (29.3)

NZ- 195/10 (45.4)
SA-108/10 (34.1)


SL - 253/10 (49.3)
PAK - 255/6 (48.1)

WI - 234/6 (50)
AUS - 224/9 (50)


NZ - 165/10 (49.2)
SL - 166/3 (36)

ENG-169/10 (45)
AUS-170/4 (36.5)

SA-219/9 (50)
SL-141/10 (39.1)

NZ-274/7 (50)
PAK-223/10 (46.3)

IND-223/9 (50)
WI-224/7 (49.4)

SA-213/8 (50)
PAK-89/10 (25)

இதில் நன்றாக பாதிக்கப்பட்டவர்கள் இந்தியா, பாக்கிஸ்தான், லங்கா அணியினர்தான். இவர்களுக்கு இந்திய ஆடுகளங்களே எமனாகி உள்ளது. என்ன செய்வது பாவம். தரமான ஆடுகளங்களில் பயிற்சி பெறாதவர்கள் தானே. ஏற்கனவே இதில் இரண்டு அணிகள் வெளியாகி விட்டது. இந்தியா மட்டும் மிச்சம். 29-ம் தேதி தெரியும் அதுவும். இத்தகைய ஆடுகளங்களில் நன்றாக பேட் செய்பவர்கள் செய்து தான் வருகிறார்கள். சரியான, முறையான ஆட்டத்தின் மூலம் (correct footwork, shot selection) இது போன்ற ஆடுகளத்திலும் ஓட்டங்கள் குவிக்கலாம் என்பது வேறு செய்தி. ஒரு தலை பட்ச ஆட்டங்களாக இல்லாமல் ஆட்டம் முடியும் வரை விருவிருப்பாகவே உள்ளது இம்முறை. இப்படித்தான் இருக்க வேண்டும். அதில்லாமல், சும்மா 300 எடுத்து, அதையும் எதிரணி சேஸ் செய்து வெற்றி பெற்று. சே! என்ன ஆட்டங்கள் அவை. அப்படி ஆடுகளங்களில் ஆடி தானே நாமெல்லாம் வெறும் மட்டையாளர்களை மட்டுமே தலையில் தூக்கி வைத்து ஆடுகிறோம். இந்தியாவில் எப்போதாவது பந்து வீச்சாளர்களை மதித்திருக்கிறோமா? எந்த பந்து வீச்சாளர்களாவது (கபில் - ஆல் ரவுண்டர்) இந்தியாவிற்கு தலமை தாங்கி இருக்கிறாரா? இது போன்ற ஆடுகளங்களை மேலும் உருவாக்கினால் அந்த குறை தீரும்.


இந்த முறை நடக்கும் போட்டிகளில் என்னை உறுத்திய மற்றொரு செய்தி என்னவென்றால், வெறும் நான்கு நகரங்களில் மட்டுமே இந்த அனைத்துப் போட்டிகளும் நடத்தப்படுகிறது. மும்பை (வான்கடேயில் இல்லை என்பது வேறு செய்தி), அஹமதாபாத், ஜெய்ப்பூர் மற்றும் மொஹாலி. இந்த நான்கு நகரங்களும் இந்திய வரை படத்தில் மேற்கு & வட மேற்கு திசையில் உள்ள மாதிரி தெரியவில்லை? ஆம், இங்கும் அரசியல் இருப்பதாகவே தெரிகிறது எனக்கு. இதெல்லாம் (குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப் வாரியங்கள்) பவாரின் ஜல்லியடி கூட்டத்தினர்கள் என்றே கருதுகிறேன். இல்லையென்றால் பெங்களூர், சென்னை, கல்கத்தா போன்ற ஒப்பற்ற நகரங்கள் புறக்கனிக்கப் பட்டிருக்குமா? என்று ஓயும் இந்த விளங்காத அரசியல் இந்திய கிரிக்கெட்டில்!!


சரி, 29-ந் தேதி ஆட்டத்திற்கு வருவோம். இன்று இந்தியா, ஆஸ்திரேலியாவிற்கு எதிரான காலிறுதி போட்டி என்றே கூறலாம். இந்த மன்னாய்ப் போன சாப்பல் , இர்ஃபானை வைத்து சோதனை செய்வதை நிறுத்து விட்டு. சரியான அணியைத் தேர்ந்தெடுத்து (மோங்கியாவிற்கு வாய்ப்பு வழங்க வேண்டும்- ராய்னா அவுட்), சரியான பேட்டிங் ஆர்டர் அமைத்து, தன்னம்பிக்கை வீரர்களுக்கு அளித்து நம் அணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும். ஏன் இதையெல்லாம் நமது ட்ராவிடம் கூறாமல் சாப்பலிடம் கூறவேண்டும்? சாப்பல் சொல்வதை ஆமாம் சாமி, சரி சாமி போடுவது மட்டும் தானே ட்ராவிட் செய்து வருகிறார். முதுகெலும்பில்லாத அணித் தலைவர்.

Tuesday, October 17, 2006

மீண்டும் அசாருத்தீன்...

முகம்மது அசாருத்தீன். 6 ஆண்டுகளுக்கு முன்பு வரை கிரிக்கெட் உலகின் புகழின் உச்சியில் இருந்தவர். பல சாதனைகளுக்கு உரிமையாளர். அறிமுகமாகியதிலிருந்து (1984) முதல் மூன்று போட்டிகளிலும் தொடர்ந்து நூறுகளை அடித்தவர். ஜெயசூர்யா அதிரடியாக நூறு அடிக்கும் முன்பு வரை அதிவேக ஒருநாள் நூறுக்கு (62 பந்துகளில்) உரிமையாளர் (இன்று வரை அதுவே இந்தியாவின் அதிவேக நூறு). உலகின் தலைசிறந்த தடுப்பாட்டக்காரர் (ரோட்ஸுக்கு அடுத்து அவராகத்தான் இருப்பார்). இப்படி எத்தனையோ கூறிக்கொண்டே போகலாம்.


ஆனால், 2000-ம் ஆண்டு அவருக்கு வந்தது வினை. சூதாட்டத்தில் அவருக்குத்தான் பெரும் பங்குண்டு என்று குற்றாச்சாட்டிற்கு ஆளானார். அவருடன் சேர்ந்து ஜடேஜா, மோங்கியா, அஜய் ஷர்மா, பிரபாகர், சலிம் மாலிக், க்ரோனே ஆகியோரின் பெயர்களும் அடிபட்டது. அதில் க்ரோனே குற்றத்தை வெளிப்படையாக (சிறிது நாட்களுக்குப் பிறகுதான்) ஒப்புக் கொண்டார், அதோடில்லாமால் அவருக்கு சூதாட்டக்காரரை அசாருத்தீன் தான் அறிமுகப்படுத்தியதாக கூறினார். அதனால் அசாருக்கு வந்தது சோதனை. அவர் குற்றம் சுமத்தப்பட்டார். ICC-யும் அசார், க்ரோனே மற்றும் சலீம் மாலிக் ஆகியோர் மீது கிரிக்கெட் ஆட்டம் தொடர்பான (விளையாடுவது, வர்ணனை, பயிற்ச்சி கொடுப்பது போன்றவற்றிலிருந்து) செயல்களிலிருந்து முற்றிலும் ஆயுள் தடை விதித்தது. BCCI -யும் அதைத் தொடர்ந்து அதே போல் தடை விதித்தது. இதில் அசார் இதுவரை அவர் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ஒப்புக்கொள்ள வில்லை. தடையை எதிர்த்து நீதி மன்றத்தில் முறையீடு செய்திருந்தார். இதுவரை விசாரனையில் அவருக்கெதிரான குற்றத்திற்கு ஆதாரம் கிடைக்கவில்ல. குற்றமும் நிரூபிக்கப்படவில்லை. இந்த நிலையில் அவர் BCCI,ICC யால் ஒதுக்கியே வைக்கப்பட்டிருந்தார்.


ஓரிரு நாட்களுக்கு முன் திடிரென அவரைப் பற்றிய புதிய சலசலப்பு கிரிக்கெட் உலகில் கிளம்பியுள்ளது. அதாவது, இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலமைச் செயலகம் மும்பையில் சில நாட்களில் திறக்கப்பட உள்ளது. அந்நிகழ்ச்சியில் இந்தியாவின் அனைத்து அணித் தலைவர்களையும் அழைத்து சிறப்பிக்க முடிவு செய்துள்ளார்கள். அதில் அசாருத்தீனும் அடக்கம். அவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது டால்மியா போய் பாவார் வந்ததால் வந்த மாற்றம் என கிசு கிசுக்கப்படுகிறது. டால்மியாதான் அசாரின் துன்பங்களுக்கு காரணமென ஒரு பேச்சும் உள்ளது. அது கிடக்கட்டும். அசார் நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டதை ICC கண்டனம் செய்துள்ளது. அதை எதிர்த்து பிந்த்ரா, மற்றும் பவார் குரல் எழுப்பியுள்ளனர். தடை நீக்கம் குறித்தும் விவாதிக்கப் போவதாக தெரிகிறது. பவார் கூறியதாவது:


அசார் இந்திய அணிக்கு பலவாறு திறம்பட கடமையாற்றியுள்ளார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அவருக்கு எல்லா தகுதியும் உள்ளது.






ICC இந்திய அணியிடம் மட்டும் காட்டமாக நடந்து கொள்வதேன்? கலங்கம் சுமத்தப்பட்டு தடை செய்யப்பட்ட வீரர்கள் கிப்ஸ், வார்னே ஆகியோர் இப்போதும் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அசார் இனிமேல் விளையாடப் போவதில்லை.





எது எப்படியோ, அசாரின் சாதனைகள் மகத்தானவை. அவர் இந்திய அணிக்கு ஆற்றிய தொண்டும் மகத்தானவையே. சிறந்த வீரர். அவருடைய அந்த லெக் ஃப்லிக் இன்று வரை எந்த ஆட்டக்காரராலும் பயிற்சியின் போது கூட செய்ய முடியாதவை. அவரின் பேட்டிங் ஸ்டைல் எதிரணி வீரர்களை கூட மயக்குபவை. அப்படி இருந்தவரின் இருந்தவரின் நிலை இன்று இப்படி. சோகமே, என்னைப் பொறுத்தவரை அவர் மேலுள்ள குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாதவரை இந்த தடை பொருளற்றதே. அவரால் இனிமேல் இந்திய அணிக்கு விளையாட முடியுமா (தடை நீங்கி வாய்ப்பு கிடைக்குமா?) தெரியவில்லை (ஆனால் மனிதன் இப்போதும் அதே பெர்ஃபெக்ட் ஃபிட் தான்). அவருக்கு இந்திய கிரிக்கெட் தொடர்பானவற்றிலாவது அனுமதிக்க வேண்டும். என்ன சொல்கிறீர்கள்?


பின்பு, எனக்கு ஒரு வித்தியாசமான விருப்பம் ஒன்றுள்ளது. அதாவது, அசார் இதுவரை 99 (நாட் அவுட்) டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ளார். அவருக்கு 100 போட்டி ஆடச்செய்து (ஏடன் கார்டனாக இருந்தால் சிறப்பு), அதே போட்டியில் நம்ம 'தல' கங்குலிக்கும் வாய்பளித்து, இருவருக்கும் சிறந்ததொரு பிரிவுபச்சார ஆட்டம் ஆடச்செய்து சிறப்பிக்க வேண்டும். இரண்டு வெற்றிகரமான தலைவர்களையும் சிறப்பித்தது போலாகிவிடும். என் விருப்பமும் நிறைவேறி விடும்.

Monday, October 02, 2006

என்ன தோன்றுகிறது??




மேலே உள்ள படத்தைப் பார்த்தவுடன் உங்களுக்கு என்ன தோன்றுகிறது என்பதை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள். நான் இப்படத்தை பார்த்தவுடன் அலுவலகம் என்று கூட பாராமல் வாய்விட்டு சத்தமாக சிரித்து விட்டேன். எல்லாரும் என்னைப் பார்த்து முறைத்ததுதான் மிச்சம். (பின்பு எல்லாருக்கும் மின்னஞ்சல் அனுப்பி வைத்து விட்டேன்)

சிறந்த கமென்ட்... பரிசு... அப்படியெல்லாம் ஒன்னும் கிடையாதுங்க... சும்மா.. இதைப் பாத்து நீங்க என்ன் நினைக்கிறீங்கனு தெரிஞ்சுக்கத் தான். :) புகுந்து விளையாடலாம்.

Wednesday, September 27, 2006

நம்ம 23-ம் புலிகேசி Project Manager ஆனால்...

காலையில் ஒன்பது மணிக்கு வர வேண்டியது. கணிணியின் திரையைப் பார்த்துக் கொண்டே வேலை செய்வது போல் நடிக்க வேண்டியது. மாலையில் வீட்டிற்கு அடித்து புரண்டு ஓட வேண்டியது. இதில் இடையில் ஒரு மணி நேரம் உணவு இடைவேளை வேறு. அது மட்டுமின்றி இடையிடையில் ஐந்து முதல் பத்து நிமிடங்கள் தேனீர் அருந்த ஓய்வு நேரம். கூடவே டோர்ம் (Dorm) - ல் உறங்க நாற்பது நிமிடங்கள் சென்று விடும். ஐந்தறிவு ஜீவன்கள் போல் ஒரு வாழ்க்கை. Deadline வந்தால் மட்டுமே ஆறாவது அறிவிற்கு வேலை. கேட்டால் மென்பொருள் நிறுவனத்தில் வேலை என்று பீற்றிக்கொள்வது.


(நண்பனிடம் இருந்த வந்த மின்னஞ்சலில் சிக்கியது)

Monday, September 25, 2006

உலக வெப்பநிலை உயர்வால் (Global Warming) மெரினாவுக்கு ஆபத்தா?

ஆம் என்றே தோன்றுகிறது இந்த இணையத்தளத்தின் கணிப்புப் படி. உலக வெப்ப நிலை உயர்ந்தால் கடல் மட்டம் 7 மீட்டர் அளவு வரை உயரும் என்று ஆய்வாளர்களால் அறியப்படுகிறது. அவ்வாறு நிகலுமாயின் உலகின் நிலப்பரப்பில் எந்த அளவிற்கு கடல் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை இந்த தளம் கணித்து அதற்கேற்ப நீல வண்ணத்தை பாதிக்கப்படும் இடங்களாக காட்டுகிறார்கள்.

கீழே சென்னை நகரத்தின் படம்.

Photobucket - Video and Image Hosting

எனது ஊர் கடற்கரையிலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது. இதன் கூற்றுப்படி பார்த்தால் எங்கள் ஊருக்கு அழகான (?!) கடற்கரை கிடைக்கும் என நினைக்கிறேன். நீங்களும் இத்தளத்தினுள் விரைந்து சென்று உங்கள் வீடு பாதுகாப்பாக இருக்குமா என்பதை பார்த்துக் கொள்ளுங்கள். மெரீனாவிற்கு ஆபத்து என்றே தோன்றுகிறது. மெரீனா முழுவதும் கடலினுள் செல்லும் வாய்ப்பு உள்ளது. எழும்பூரில் வசிப்பவர்களுக்கு ஒரு நற்செய்தி. உங்களுக்கு அழகான கடற்கரை பார்த்தாற் போன்ற வீடு அமைய வாய்ப்புள்ளது.

link: http://flood.firetree.net/

Wednesday, September 20, 2006

ஹய்யா!!! பொழப்பு மணக்கிறது...:)

(முன் குறிப்பு: 'ஐயகோ!! பொழப்பு நாறிக்கொண்டிருக்கிறது' என்றிருந்த தலைப்பு எதிர்பாராத முடிவால் மாற்றப்பட்டுள்ளது.)


நான் பயந்தது போலவே நடந்து கொண்டிருக்கிறது. ஆம், இந்திய அணி தற்போதய நிலையில் 73/5 (17.5 ov) என்ற பரிதாப நிலையில் தத்தளித்து கொண்டிருக்கிறது.

எனக்கு ஒன்று மட்டும் விளங்கவே இல்லை. இந்த தொடக்க ஆட்டக்கார இடமானது எல்லாருக்கும் தெரியும் அதிரடி வீரர்களுக்கென்றே பெயர் போனது. உதாரனமாக: ஜெயசூர்யா, கலுவிதரனா, சச்சின், கங்குலி, சேவாக், கில்க்ரிஸ்ட், அஃப்ரிடி. அது போல் இந்த உலகிற்கே தெரியும் இந்திய அணியின் மெதுவாக ரண் குவிக்கும் வீரர் (குறை சொல்லவில்லை) நம்ம ட்ராவிட் என்று. பினு ஏன் அவர் மீண்டும் மீண்டும் ஆட்டத்தை தொடக்குகிறார் என்று எனக்கு பிடிபடவே இல்லை. அவரின் இந்த அனுகுமுறை பற்றி யாருக்குமேனும் அறிந்து இருந்தால் தயவு செய்து பகிர்ந்து கொள்ளுங்களேன்.

Sunday, September 17, 2006

கிரிக்கெட்: பொழப்பு நாறாம இருந்தா சரிதான்

நம்ம ஆளுங்களுக்குத் தான் கிரிக்கெட் பத்தி பேசுரதுன்னா போதுமே. நாலு நாளைக்கு கஞ்சி தண்ணி இல்லாமக் கூட இருந்த இடத்துல சீட்டு தேயுர வரைக்கும் (நானும்தாங்கோ) பேசுவானுங்க. இப்போ நடந்துக்கிட்டு இருக்கும் கோலாலம்பூர்ல (பேருல ஏதோ அமெரிக்கா சதி மாதிரி தெரியுதுல்ல? ... இருக்கட்டும் அதைப் பத்தி அப்புறம் விசாரிக்கலாம்) நடக்கும் முத்தரப்பு போட்டியை பத்தி விளாவாரியா அரட்டை அடிக்கலன்னா எப்படிங்க. அதான் ரெண்டு மூனு பேரு எழுதுராங்கல்ல உனக்கென்ன லொடுக்குன்னு சொல்ரீங்கலா? நம்ம நாட்டுல கிரிக்கெட்டுக்கு இருக்குர மவுசுல ரெண்டு மூனெல்லாம் பத்தாதுங்கோ.. அதான் நானும் இங்க...


நம்ம டீம் போகும் போதே சச்சின் பேரைச் சொல்லி படங்காட்டிடுத் தான் போச்சுங்க. படங்காட்டுன மாதிரி நம்மாளு அடிக்கத்தாஞ் செஞ்சான். ஆனா பாருங்க அவரு அடிச்சாலே டீம் வெளங்காதுன்னு என்னோட கூட உள்ளவனுங்க சொன்ன மாதிரி ஆகி போச்சு. அட முடிவை நம்ம ஆட்களுக்கு ஏத்துக்குற பக்குவம் போதாதுங்க. மழை குறுக்க வந்து கெடுத்து புருச்சாம். அலுத்துக்கிறானுங்க. நான் சொன்னேன், அட போங்கப்பா சச்சின் அடிச்சதெல்லாம் சரிதான். ஆனா வெஸ்ட் இன்டீஸ் காரனுங்க கெடச்ச 20 ஓவர்ல நம்ம பந்துவீச்சாலர்களை பிரிச்சு மேய்ஞ்சாய்ங்க பாருங்க அதை மறுக்கா கூடாதுன்னு. என்னங்க நான் சொன்னது சரிதானே? என்ன கேட்டா, மழை வராம இருந்திருந்தா 40 இல்ல 45 ஓவர்லேயே அவனுங்க ஜெயிச்சுருப்பானுங்க. ஆமா.


அப்புறம். இந்த ரெண்டாவது ஆட்டம். அதுவும் ஜகஜால கில்லாடிங்க ஆஸ்திரேலியா கூட. கொஞ்சம் தொட நடுங்குர சமாச்சாரம் தான் (பின்ன ரொம்ப நாள் கழிச்சு, பந்த அளந்து பிசகாம வீசுர படுபாவி மெக்ராத் வந்துருக்கான்ல). செய்தியெல்லாம் ஒரே பரபரப்பு செய்தி 'சச்சின் - மெக்ராத் மீண்டும்' என்று. நான் மனசுக்குல்லேயே நெனச்சுக்கிட்டேன். இது அப்போ உள்ள சச்சின் இல்லன்னு. இப்போ உள்ள சச்சின் தரம் கொறஞ்ச பந்துவீச்சை மட்டும் தான் விளாசுவாரு. முன்ன மாதிரி இல்லன்னு. அதுவும் இந்த முறை சேஸிங் வேர. மெக்ராத் சச்சினுக்கு வீசுன மொத பந்தே ஹெல்மெட்ல. கொடுமட சாமி. பயங்காட்டுரானே நெனச்சா மீண்டும் மழை. சரி டார்கெட் தான் குறச்சாச்செ பசங்க சீக்கிரம் பயப்படாம அடிச்சுருவானுங்கன்னு நப்பாசை. கிழிஞ்சது போங்க. அந்த ஜான்ஸன் பய வந்து ஆட்டத்தையே கெடுத்துப்புட்டான். மட மடன்னு கம்பி நீட்டுரானுங்க நம்ம பசங்க. போச்சுடான்னு நெனச்சா மீண்டும் மழை. புள்ளிகள் பங்கீடு. என் கூட இருந்தவனுங்க இதை ஒரு வெற்றி மாதிரி கொண்டாடுரானுங்க. அட நாதாரிங்களா! இன்னும் ஒரு அஞ்சு நிமிஷம் கழிச்சு இந்த மழை வந்திருந்தா நாறிப் போயிருக்கும்டா நாறி. பொழப்பு சிரியா சிரிச்சுருக்கும். நம்ம ஆளுங்க ஆடுன ஆட்டத்தை நெனச்சு வருத்தப்படுவானுங்களா? கொண்டாடுரானுங்க. சே இதெல்லாம் ஒரு பொழப்பா!!!

சே! இந்த சாப்பல் எப்பத்தான் சோதனை முயற்சியை நிறுத்தப் போறாரோ! நமக்குத்தான் அதுவரை சோதனையா இருக்கும்.


என்னாமோ போங்க! நம்ம டீம் ஃபைனல் போகுதானு பாப்போம். யப்பா சாமிகளா கொஞ்சம் (நிறைய) நல்லா ஆடுங்கடா!!

Wednesday, September 06, 2006

கங்குலியும் சதுரங்கமும்

Photobucket - Video and Image Hosting

மீண்டும் ஒருமுறை கங்குலி எனும் பகடை இந்திய கிரிக்கெட் அரசியல் சதுரங்கத்தில் வெட்டப்பட்டுள்ளது.

ஆமாங்க, நான் ஒரு கங்குலி விசிறிதான். அதற்காக அவர் தான் உலகின் தலைசிறந்த வீரர் என்று சொல்லவில்லை (என்னைப் பொறுத்தவரை ட்ராவிட் தான் தற்போதய கிரிக்கெட் உலகின் மிகச் சிறந்த வீரர்). ஆனால் அவரை கிரிக்கெட் அரசியலில் இறக்கிவிட்டு. பகடை காயாக்கி வேட்டயாடி விளையாடிக் கொண்டிருக்கிறது ஒரு கூட்டமே. இதில் இந்திய அணியின் தற்போதய பயிற்சியாளரும் அடக்கம். க்ரேக் சாப்பலின் நடவடிக்கைகள் அனைத்தும் முட்டாள் தனமாகவே உள்ளது (முட்டாள்களின் விளையாட்டு என்பதனாலா?). இன்றைய தேதி வரை அவர் சோதனை(experiment) மட்டுமே செய்து கொண்டிருக்கிறார். எப்போது சோதனை முடிந்து ஒரு முடிவுக்கு வரப் போகிறாரோ தெரியவில்லை. அவருக்கு உலகக் கோப்பை நெருங்கி வருகிறது என்பதை யாராவது நினைவுபடுத்தினால் புண்ணியாமய் போகும். ட்ராவிட் தொடக்க ஆட்டக்காரராம். என்ன எளவுப்பா அது. அவர் தான் முதுகெலும்பு. அதைப் பலிகட ஆக்கவா சோதனை முயற்சி.


ம்ம்ம். அதை விடுங்க. கங்குலி நீக்கப்பட்ட நேரத்தில் அப்படி என்ன மோசமாக ஆடினார் என்று தூக்கினார்கள்? அந்த நேரத்தில் அவர் கண்டிப்பாக சேவாக், சச்சின், கைஃப் விட நன்றாகத்தான் ஆடி இருந்தார். அவரது நீக்கம் முற்றிலும் அரசியல் என்பது நாடறிந்த உண்மை. அதன் பிறகு ஒரு வருட காலம் முற்றிலும் சீண்டக்கூட படவில்லை. கேட்டால், இளைஞர்களுக்கு முன்னுரிமை, ஃபீல்டிங்கில் அவர் வீக். அடப் பாவிகளா?? அப்போ நீங்க, சச்சின் மட்டும் முழுதகுதி இல்லாத போதும் எந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டார்? அதிலும் இந்த சச்சின் இருக்காரே சரியான உஷார் பேர்வழி. துனைக்கண்டங்களின் நடக்கும் தொடருக்கு மட்டும் 'நான் ஃபிட்' என்று அறிவித்து விடுவார். வெளியே என்றாலே கிலிதான் மச்சானுக்கு (தற்போதய சச்சினை மட்டுமே சொன்னேன்). ஆனால் அவர் காயங்களில் இருந்து மீண்டு வந்தால் நேரடியாக தேர்வாவார். உள்ளூர் போட்டிகளில் ஆடத்தேவையில்லை. மற்றவர்கள் கண்டிப்பாக ஆட வேண்டும். அதென்ன அப்படி? அவர் என்ன ட்ராவிட் மற்றும் கும்ப்ளே விட டெஸ்ட் போட்டிகளை வென்று தந்தாரா? இல்லை கங்குலி போல் ஒரு நாள் போட்டிகளை வென்று தந்தாரா? அவர் செய்தது எல்லாம் எக்கேடு (அணி) கெட்டாவது சொந்தா எண்ணிக்கை கூட்ட வேண்டும். கங்குலி ஒன்றும் சச்சினுக்கு (ஒரு நாள் போட்டிகளில்) குறைந்தவரில்லை என்பது கிரிக்கெட் அறிந்தவருக்கு தெரியும். அப்படி இருக்கும் போது ஏன் இரு வேறு அளவுகோல்கள்?

எது எப்படியோ? அணி வெல்ல வேண்டும் (உள் நாட்டில் மட்டுமில்லாமல்). DADA அணிக்கு திரும்ப வேண்டும். அந்த lofted Straight Sixes நாங்கள் மீண்டும் காண வேண்டும்.(விடுபட்டவை பின்னூட்டங்களில் அலசப்படும்.)

சித்திரம் பேசுதடி

டைம்ஸ் ஆஃப் இன்டியாவில் வெளியான சில கேளிச் சித்திரங்கள்.







Wednesday, August 30, 2006

அமெரிக்காவுக்கு இரான் சவால்!!

இன்றைய Gulf News நாளேட்டின் முகப்பு செய்தி:





இதில் யார் போக்கை திசை திருப்புகிறார்கள் என்பது எனக்கு குழப்பமாக இருக்கிறது. ஆமா! அதென்ன P5+1 பேக்கேஜ்? அமெரிக்கா பேக்கேஜ் லாபமில்லாமல் இவ்வளவு கூவாது என்று பொருளோ??? என்னமோ போங்க!

இதனை குறித்த விவாதங்கள் வரவேற்கப் படுகின்றன.

Tuesday, August 29, 2006

அனானி வாரம்!!!

ஆம்! நானும் ஒரு அனானிதான் கடந்த சில மாதங்களாக. பதிவுகளை வாசித்து வந்ததோடு சில நேரங்களில் பின்னூட்டங்களும் இட்டுருக்கிறேன். அதற்காக என்னை முகம் வெளிகாட்ட விரும்பாத கோழை என்றழைத்தால் நான் பொருப்பல்ல. எனக்கும் நல்ல ஆக்கமான பதிவுகளை எழுத விருப்பம்தான். வேளைப் பளு மற்றும் சிறிது நாளாகட்டும் என்ற சோம்பேறித்தன்மும் தான் காரணம்.


அனானியாக வந்து மறுமொழி இடுவதை தடுத்து வைக்கும் கொள்கை என்னவென்று எனக்கு இதுவரை விளங்கவில்லை. யாரா இருந்தா என்ன? அவன் என்ன சொல்ல வர்ரான்னு தான் பாக்கணும். அவன் கருத்து பதிவுக்கு சம்மந்தம் இல்லையா, ஒதுக்குவதை உட்டுப் புட்டு சும்மா அது இதுனு...


அன்பு அனானிகளே, நான் உங்களில் ஒருவன். நம்மீது பார்வை பட்டுவிட்டது. பட்டய கெளப்புங்க! ஆனா ஒரு வரம்பு இருக்கட்டுமே!!!

Monday, August 28, 2006

என் இனிய தமிழ்மன(ண)ங்களே!

ஒரு ஆறு மாதத்திற்கு முன் தான் நான் தமிழ்மணத்திற்குள் எட்டி பார்த்தேன். பார்த்தவனுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி. நமக்கு தெரியாம இங்க இப்படி ஒரு கூத்து நடக்குதான்னு. இங்க எப்படி? யார் மூலம்? நான் தலய காட்டுனேன்னு தான் மறந்து போச்சு.


உண்மையைச் சொன்னால் இங்கு தமிழில் எழுதுபவர்களை பார்த்து மகிழ்ச்சியடந்தேன். பலர் பல நிகழ்வுகளை தெரிந்து வைத்திருக்கின்றனர். அதோடில்லாமல் அதை விவாத்திற்குள்ளாக்கவும் தெரிந்து வைத்திருக்கின்றனர். நல்ல செய்திதான், ஆனால் அவர்களையும் அறியாமல் சிலரால் திசை திருப்பப்பட்டு இறுதியில் தனி மனித தாக்குதலோ / இன தாக்குதலோ தான் மிஞ்சுகிறது என்பது வருத்தம் அளிக்கிறது. ஆனால் இங்கு வந்து வாசிக்க தொடங்கியதிலிருந்து இணையத்தில் தவறாது நாள்தோறும் வாசித்து வந்த நாளேடுகள் வாசிப்பை நிறுத்தி விட்டேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில், அந்த அளவிற்கு எனக்கு தமிழ்மணத்தில் செய்திகள் கிடைத்ததும், நாளேடுகள் அனைத்தும் நடுநிலை இழந்து இருப்பதும் தான்.


சரி, எத்தனை நாட்களுக்குத் தான் வாசகராகவே இருப்பது, நாமலும் பட்டய கெளப்பலாம்னு தான் (அதாங்க உளறி கொட்டலாம்னு) இறங்கிட்டேன். இது தான் என் முதல் பதிவு. முதல் பதிவு எதைப் பத்தி எழுதலாம்னு யோசிச்சேன். ஏன் நம்மலோட தமிழ்மண உறவைப்பத்தி எழுதக்கூடாதுன்னு அதையே எழுதிட்டேன். என்ன இந்த தமிழ் தட்டச்சு தான் கொஞ்சம் மண்ட காயுது. போக போக சரியாகிடும். பாக்கலாம்.


ஆனா இங்க தான் இத்தனை குழுக்கள் இருக்கே எப்படி சமாளிக்க போரேன்னு தெரியல. ஆரியர், திராவிடர், ஆத்திகர், நாத்திகர், பார்ப்பனர், இஸ்லாமியர் இன்னும் சில. எப்படியோ குழு சேர்ந்து கும்மி அடிக்காம இருக்கத்தான் கொஞ்சம் மெனக்கெடனும். அப்பப்போ எதையாவது இங்க வந்து உளறலாம்னு இருக்கேன். இந்த வழிப்போக்கன் தமிழ் பதிவுலகத்திலும் கடந்து செல்ல வந்து விட்டான்.


குறிப்பு: இங்கு தமிழ் பிழைகள் காணப்படலாம், பிழை பொறுக்கவும்.